ஈரான் துயரம் - முஹமட் ஹசான் இரங்கல்!

top-news
FREE WEBSITE AD

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஹூசைன் அமிரப்டோலாஹியனுக்கு மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹமட்  ஹசான் தமது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

மலேசியா மற்றும் ஈரான் நாடுகளின்  இரு வழி உறவைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஈரான் வெளியுறவு அமைச்சரை இழந்தது பெரிய இழப்பு என்று அவர் கூறினார். மேலும்,  அதிபரின் மறைவு இஸ்லாமிய தலைமைத்துவ உலகிற்கும் ஈரான் மக்களுக்கும் பெரும் இழப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் டாக்டர் ஹூசைன் அமிரப்டோலாஹியனைச் சந்தித்ததை நினைவு கூர்ந்த அவர், அதன் பிறகு கடந்த மாத இறுதியில் அவரோடு தொலைபேசியில் பேசியதையும் சுட்டிக்காட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *