தீ விபத்தில் மோட்டார் சைக்கிள்களைப் பறிகொடுத்த மாணவர்களுக்கு பிரதமர் நிதி உதவி!

top-news
FREE WEBSITE AD


கடந்த சனிக்கிழமை மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் தங்கும் விடுதியின் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்களின் மோட்டர் சைக்கிள்கள் தீக்கிரையாகின.

 

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் நிதியுதவி வழங்கினார். 

அன்வாரின் அரசியல் செயலாளர் காமில் முனிம் மூலம் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக  பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 26 மோட்டார் சைக்கிள்கள் இந்தத் தீ விபத்தில் எரிந்து நாசமான நிலையில், மேலும் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதமுற்றன. இந்நிலையில் உயர்கல்வி அமைச்சின் மூலம் அரசாங்கம் தகுந்த உதவிகளை இம்மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்!

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *