அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தடையா? பெர்சாத்து விதி அப்படி சொல்லவில்லை!

top-news
FREE WEBSITE AD


 

ஒற்றுமை அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவலை, செலாட் கிளாங் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷிட் மறுத்துள்ளார். 

 

பெர்சத்து கட்சியின் சட்ட விதிகளைப் பொருத்தவரை அரசாங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய எந்தவொரு தடைகளும் விதிக்கப்படவில்லை என்று அவர் கருத்துரைத்தார். 

 

அண்மையில் நடைபெற்று முடிந்த கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக அப்துல் ரஷிட் பிரச்சாரம் செய்ததால் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முஹைடின் யாசின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *