உலுதிராம் வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை! - பிரதமர் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD


மரணத்தை விளைவிக்கும்‌ அளவுக்கு குழப்பத்தைஏற்படுத்தும்‌ நபர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கைமேற்கொள்ளப்படும்‌ என்று பிரதமர்‌ டத்தோஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிம்‌ எச்சரித்துள்ளார். ஜொகூர்பாருவில்‌  உலுதிராம்‌ போலீஸ்‌ நிலையத்தில்‌ நேற்று  அதிகாலையில்‌  நடைபெற்ற அத்தாக்குதல்‌ பற்றி கருத்துரைத்த அன்வார், போலீசார்‌ மேற்கொண்டுவரும்  ‌அனைத்து‌ முயற்சிகளுக்கும்‌ தாம்‌ ஆதரவு தெரிவிப்பதாகக்‌ கூறினார்‌.

அத்துடன்‌, அதிகாரிகளுக்கு முழுஒத்துழைப்பு வழங்கும்படி பொதுமக்களையும்‌ அவர்‌ கேட்டுக்‌கொண்டார்‌. அமைதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில்‌ நாங்கள்‌. விட்டுக்‌ கொடுத்துப்‌ போக மாட்டோம்‌. மக்களின்‌ உயிருக்கு நாங்கள்‌ முன்னுரிமை அளிப்போம்‌. அமைதியைப்‌ பேணிவராவிட்டால்‌, முன்னேற்றம்‌ என்பது அர்த்தமற்ற ஒன்றாக இருக்கும்‌. எனவே, இந்த முட்டாள்தனத்தை (வன்முறை) தடுத்து நிறுத்த வலுவான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌ என்று அவர் கூறினார்.

அரச மலேசிய போலீஸ்துறை மேற்கொண்டுவரும்‌முன்னடுப்புகளுக்கு என்னுடைய முழுஆதரவு உண்டு. அதிகாரிகளின்‌ நடவடிக்கைகளுக்கு: பொதுமக்கள்‌ ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்‌ கொள்கிறேன்‌. அவர்கள்‌ எப்போதும்‌ விழிப்புடன்‌ இருக்க வேண்டும்‌. இதுபோன்ற தீய கும்பல்கள்‌ செயல்படுவதற்கு எந்த வாய்ப்பும்‌ வழங்கப்படக்‌ கூடாது என்று மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானுக்கான தமது இரண்டு நாள்‌ அதிகாரத்துவ வருகையின்‌ முடிவில்‌ செய்தியாளர்களிடம்‌ பேசியபோது பிரதமர்‌ இதனைத் தெரிவித்தார்‌.

மலாய்‌ ஆட்சியாளர்களின்‌ நிலை பற்றி சர்ச்சைகளைத்‌ தூண்டிவிடும்‌ நபர்கள்‌ மீதும்‌ அரசாங்கம்‌ உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும்‌ என்றும்‌ அவர்‌ சூளுரைத்தார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *