மே 22 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை!

top-news
FREE WEBSITE AD

கச்சா எண்ணெயின் விலை தற்பொழுது உச்சவரம்பு விலையை விட அதிகமாக இருந்தாலும் RON97, RON95 மற்றும் டீசல் விலைகள் வரும் வாரத்திலும் அப்படியே இருக்கும் என்று நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் RON97 ன் விலை லிட்டருக்கு RM3.47 ஆகவும், RON95 லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் லிட்டருக்கு RM2.15 ஆகவும், இந்த விலைகள் மே 22 வரை அமலில் இருக்கும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]