5,000 மலேசிய மாணவர்கள் சீனாவில் TVET திட்டங்களால் பயனடைவார்கள்! - அஹமட் ஸாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD



பெய்ஜிங்: தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி  பயிற்சியான TVET துறையைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்கள்  குறுகிய கால மற்றும் நீண்ட கால படிப்புகளுக்கு  சீனாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இத்தகைய வாய்ப்புகள் மலேசிய மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப உபகரணத் திறன்களை வழங்குவதோடு, சிறந்த சம்பளம் உட்பட TVET இல் நம்பிக்கைக்குரிய வாழ்க்கைப் பாதையை வளர்க்கும் என்று அவர் கூறினார்.

220 சீன நிறுவனங்கள் மலேசிய மாணவர்களுக்கு TVET துறையில் 5,125 இடங்களை வழங்குகின்றன.

அவர்கள் மலேசியா-சீனா இளைஞர் TVET பயிற்சித் திட்டத்தின் ஃபினிஷிங் ஸ்கூல் அணுகுமுறையின் மூலம் சீனாவில் பயிற்சி பெறுவார்கள், அனைத்து செலவுகளும் இதில் அடங்கும்.

இந்த ஒத்துழைப்பு பல்வேறு மேம்பட்ட படிப்புகளில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக வாகனத் துறையில், மின்சார வாகனங்கள் (EV), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாகனங்கள் (REV), ரோபாட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *