ஆசியான் நாடுகளின் பொருளாதாரத்தில் மலேசியா கவனம் செலுத்தும்!

top-news
FREE WEBSITE AD


 கோலாலம்பூர், ஜூன் 5:  அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஆசியான் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்கும் மலேசியா, உறுப்பு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

 

ஆசியான் நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது உட்பட ஏற்கனவே செயல்படுத்தப்பட்டதை விட ,மேலும் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அன்வார் கூறினார்.

 

முதலீடு மற்றும் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துவதே பிரதான நோக்கம் என்று அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆசியானின் முக்கியமான பொருளாதாரப் பங்காளிகளில் ஒன்றாக மலேசியாவை மாற்றும் முயற்சியில் ஜப்பான் உடனான வர்த்தகம் குறித்து அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் பொருளாதாரம் முன்னோக்கிச் செல்வதில் ஜப்பான் ஏற்கனவே முக்கியப் பங்காற்றியது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *