டிரெய்லர் லாரி மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர்பாரு: டிரெய்லர் லாரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று வெள்ளிக்கிழமைஅதிகாலை 1.21 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஷம்சுல் கொமாரி பக்கார் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் EDL நெடுஞ்சாலை பண்டான் R&R பகுதிக்கு அருகில் பக்கார்  பத்து நோக்கிச் செல்லும் சாலையில் நிகழ்ந்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தெப்ராவ் நிலையத்தில் இருந்து ஏழு தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ஷம்சுல் கூறினார்.

காரின் ஓட்டுநரையும், வாகனத்திற்குள் சிக்கியிருந்த ஒரு பெண் பயணியையும் குழு வெளியேற்றியதாக அவர் தெரிவித்தார்.

ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண் சுல்தான் அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவ்விபத்தில் லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *