தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியாவில் கனத்த மழை பெய்யும் - மலேசிய வானிலை ஆய்வு மையம்!

top-news
FREE WEBSITE AD

தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியாவின் வடகிழக்கு கடற்கரையில் பல பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

மெட்மலேசியாவின் தகவலின் படி 8 மாநிலங்களில்  இன்று வியாழக்கிழமை (மே 30) இரவு வரை இடியுடன் கூடிய மழை மற்றும்  பலத்த காற்று வீசும்.

இதில் கிழக்கு கடற்கரை மாநிலங்களான கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் குவாந்தன் ஆகியவை அடங்கும்.
கெடா, பேராக் மற்றும் சிலாங்கூர்  ஆகிய பகுதிகளும் இதேபோன்ற கொந்தளிப்பான வானிலையைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மலேசியாவில் சரவாக் மற்றும் சபாவின் பல  பகுதிகள் பாதிக்கப்படும். இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மி.மீ.க்கு மேல் இருக்கும் என்று மெட்மலேஷியா அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட வானிலையை கவனித்து சாலையில் தேவையான முன்னெச்சரிக்கையுடன்  செயல்படுமாறு மெட் மலேசியா அறிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *