எனது பணத்தைக் கண்டுபிடித்துத் தாருங்கள்! - மகாதீர் அன்வாரிடம் வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD


தன்னால் திருடப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள  பில்லியன் கணக்கான பணத்தை தாம் நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மகாதீர் வேடிக்கையாகப் பதிலளித்துள்ளார்.

 

மேலும், அந்த பில்லியன் கணக்கான பணம் எங்கே இருக்கிறது என்று தமக்குத் தெரியாது என்றும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இது குறித்து விளக்கம் தருவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தன்னிடம் இருப்பதாகச் சொல்லப்படும் அந்தப் பணம் கிடைத்தால், மொத்தத்தையும் ஏழைகளுக்காக நான் செலவிடக் காத்திருப்பதாக அவர் அறிவித்துள்ளார். எனவே தமது பணத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு அவர் நகைச்சுவையாய் விமர்சித்துள்ளார்.

ஒருவேளை அது சுவிஸ் வங்கியில் இருக்கலாம். அம்பாங்கில் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கணக்கு வைத்திருப்பதைப் போல, நான் அன்வாருடன் சுவிட்சர்லாந்திற்குச் சென்று எனது கணக்கைக் காட்டுமாறு வங்கியைக் கேட்க தயாராக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கியிலோ அல்லது வேறு எங்கும் அத்தகைய கணக்கு இல்லை என்றால், நீதிமன்றத்தில் பதிலளிக்க அன்வார் தயாராக இருக்க வேண்டும் என்று மகாதீர் கூறினார்!

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *