பதவியைத் தவறாகப் பயன்படுத்திய அரசு ஊழியர்!- MACC-யிடம் சிக்கினார்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா: தனது கணவரின் நிறுவனத்திடமிருந்து RM270,000 மதிப்பிலான பள்ளித் தளவாடப் பொருட்களைப் பெறுவதற்காக தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில், செப்டம்பர் 10 ஆம் தேதி வரை ஓர் அரசு ஊழியர் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி, இன்று காலை விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, 40 வயதுடைய சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிரான காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் இர்சா சுலைக்கா ரோஹனுதீன் பிறப்பித்தார்.

அந்தப் பெண் நேற்றிரவு 7 மணியளவில் MACC தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

2021 மற்றும் 2022 தாம் ஆண்டுகளுக்கு இடையில் இம்முறைகேடு நடந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் அப்பெண், தனது கணவரின் நிறுவனத்திடமிருந்து பள்ளி தளவாடப் பொருட்களைப் பாதுகாப்பதற்காக தனது பதவியைப் பயன்படுத்திக் கொண்டதாக நம்பப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *