புதிய ஐஜிபி PKR உறுப்பினரா? - அப்படியெல்லாம் இல்லை! - ஃபுசியா சாலே

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 21: புதிய காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) காலிட் இஸ்மாயில், ஒருபோதும் பிகேஆரின் உறுப்பினராக இருந்ததில்லை, ஒரு மாநிலக் கட்சித் தலைவராகவும் இருந்ததில்லை என்று ஃபுசியா சாலே தெரிவித்துள்ளார்.

ஐஜிபியை ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்பு படுத்துவது போன்ற உள்ளூர் செய்தி நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட கூற்றுகளுக்கு பிகேஆர் பொதுச் செயலாளரான அவர் இவ்வாறு பதிலளித்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

ஐஜிபியின் சுயவிவரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது அவரது பிம்பத்தையும் நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.

காலிட் ஐஜிபியாக நியமிக்கப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது என்று பொதுமக்கள் நம்பினால், ஆளும் கட்சியாக பிகேஆர் குறித்த எதிர்மறையான கருத்துக்களையும் இது தூண்டக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் சம்பந்தப்பட்ட  செய்தி நிறுவனம் உள் விசாரணையை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்!
Fuziah Salleh menafikan IGP baharu, Khalid Ismail pernah menjadi ahli PKR. Beliau menyelar dakwaan palsu oleh media tempatan yang boleh menjejaskan imej dan kredibiliti IGP serta menimbulkan salah faham terhadap PKR sebagai parti pemerintah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *