புலாவ் பெர்கெந்தியானில் ஜெர்மன் சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழந்தார்!

top-news
FREE WEBSITE AD

ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கணவருடன்  புலாவ் பெர்கெந்தியான் பகுதியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட டாக்டர் லூசன்-ஃப்ரீலிங் ஐரிஸ் (வயது74) பிற்பகல் 3.30 மணியளவில் தனது கணவருடன் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது  மூழ்கி உயிரிழந்ததாக திரங்கானு காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் கைரி கைருடின் தெரிவித்தார்.

ஒரு ஜெர்மானியரான பாதிக்கப்பட்ட  வெளிநாட்டு பெண்ணின் கணவர், தனது மனைவி நீரில் மூழ்குவதைக் கண்டதும் பொதுமக்களின் உதவியுடன்  மீட்டனர்.  

ஆனால் அவர் மனைவிக்கு முதலுதவி சிகிச்சை  பலனளிக்காததால் உடனடியாக புலாவ் பெர்கெந்தியான் ஹெல்த் கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,  சம்பந்தப்பட்ட மாது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக அவர் இன்று ஓர்  அறிக்கையில் தெரிவித்தார்.

 பின்னர்  உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெசுட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, காவல்துறையினர் இந்த வழக்கை திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாகவும் முகமட் கைரி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *