முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஏன் அமைச்சு? பெர்சாத்து – பாஸ் தலைவர்கள் கேள்வி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 14: தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் முஸ்லிம் அல்லாத விவகாரத் துறையை அமைக்க மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) முன்வைத்த முன்மொழிவை பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

முஸ்லிம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏற்கனவே ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் வருவதால், புதிய துறை தேவையற்றது என்று பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் வான் அகமது ஃபைசல் வான் அகமது கமல் கூறினார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையும், அவர்கள் பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் அல்லது இந்துக்கள் என யாராக இருந்தாலும், தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் எல்லைக்குள் விவாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டால், அதை ஒற்றுமை அமைச்சர் மற்றும் மத விவகார அமைச்சர் கூட்டாகக் கையாளலாம், என்று அவர் தெரிவித்தார்.

அதே வேளைல் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அப்னான் ஹமிமி தைப் அசமுடின் இதனை ஒப்புக்கொண்டார். முஸ்லிம் அல்லாத விவகாரங்களை நிர்வகிப்பது அமைச்சகத்தின் பங்குகளில் ஒன்று என்று கூறினார்.

 எனவே, புதிய துறை தேவையில்லை என்று பெரிகாத்தான் தேசிய இளைஞர் அமைப்பின் தலைவரும் ஆன அப்னான் கூறினார்.

நேற்று, MIPP துணைத் தலைவர் எஸ். சுப்பிரமணியம், பிரதமர் துறையில் இரண்டு மத விவகார அமைச்சர்களை - ஒன்று முஸ்லிம்களுக்கும் மற்றொன்று முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் - நியமிக்க டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹுய் முன்மொழிந்ததற்கு ஆதரவளிப்பதாகக் கூறினார்.

ஒற்றுமை அமைச்சின் கீழ் ஒரு முஸ்லிம் அல்லாத விவகாரத் துறையை அமைப்பதை அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்றும், இது முஸ்லிம் அல்லாத நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட "கவனிக்கப்படாத பிரச்சினைகளை" தீர்க்க உதவும் என்றும் சௌ கூறியிருந்தார்.

இந்நிலையில் சௌவின் முன்மொழிவு எதிர்க்கட்சிகளிடமிருந்தும், அரசாங்கக் கூட்டாளிகளான அம்னோ மற்றும் அமானாவின் தலைவர்களிடமிருந்தும் எதிர்வினையைப் பெற்றது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *