காவல் நிலையத்தில் தாக்குதல். 2 அதிகாரிகள் பலி! - Ulu Tiram Balai Polis

top-news
FREE WEBSITE AD

ஜொகூரில் உள்ள உலு திராம் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த தாக்குதல் சம்பவத்தில், இரண்டு காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர். மற்றொரு அதிகாரி படுகாயம்.

  ஜோகூர் மாநிலக் காவல்துறை தலைமை ஆணையர் எம் குமார் இச்சம்பவத்தை உறுதிச் செய்தார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கியுடன் காவல்நிலையத்தில் நுழைந்து சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். 

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் காவல் அதிகாரி சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபரிடம் இருந்து வால்தர் பி99 கைத்துப்பாக்கி மற்றும் செலாரஸ் எச்கே எம்பி5 ரக துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *