கூலிமில் திடீர் வெள்ளம்! நள்ளிரவில் நிவாரண மையங்களில் மக்கள் தஞ்சம்!

top-news
FREE WEBSITE AD


கெடா, கூலிமில் நேற்று பல மணிநேரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளத்தால் கிராமத்தில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கூலிம், கரங்கானில் உள்ள கம்போங் பத்தாங் லிமாவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர்  நள்ளிரவு (வெள்ளிக்கிழமை) 12.12 மணிக்கு  செகோலா அகமா இஹ்சானியா ஜங்காங்கில் உள்ள மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


சில மணிநேரம் பெய்த கனமழையால் மலைகளில் இருந்து தண்ணீர் கிராமங்களின் தாழ்வான பகுதிகளுக்குள் சென்றதாக கூலிம் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி கேப்டன்  அமிருல் அலிஃப் அமாட் கூறினார்.


பாதிக்கப்பட்ட பகுதியில் கூலிம் குடிமைத் தற்காப்புப் பணியாளர்கள்  நிலைமையைக் கண்காணிக்க அனுப்பப்பட்டுள்ளதாக கேப்டன் அமிருல் அலிஃப் கூறினார்.


மேலும், அப்பகுதியில் அதிக ஆபத்துள்ள ஒவ்வொரு இடத்திலும் உள்ள நீர் நிலைகளை அளந்து வருவதாகவும் அவர் கூறினார்.

பண்டார் பாருவில், இரண்டு துணை மாவட்டங்களில் உள்ள 14 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 58 பேர் மீட்கப்பட்டு மஸ்ஜித் சுங்கை பத்துவில் உள்ள நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

இது அதிகாலை 3 மணிக்கு செயல்படுத்தப்பட்டது.

சுங்கை பத்து துணை மாவட்டத்தில் கம்போங் செரோக் மெரண்டி மற்றும் கம்போங் சுங்கை பத்து மற்றும் செலாமா துணை மாவட்டத்தில் கம்போங் சுங்கை தெங்காஸ் ஆகிய கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக பண்டார் பாரு பொது பாதுகாப்பு அதிகாரி அப்துல் ரஹீம் கரூடின் தெரிவித்தார்.

மூன்று மணி நேரம் பெய்த மழையால் அருகிலுள்ள ஆறுகள் பெருக்கெடுத்து, அருகிலுள்ள கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *