தூக்கிலிருந்து தப்பினார் பன்னீர்! - கடைசி நிமிடத்தில் சிங்கப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

- Shan Siva
- 20 Feb, 2025
சிங்கப்பூரில் இன்று
தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட மலேசிய கைதி பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு
சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தூக்கிலிருந்து தற்காலிக தடை
விதித்துள்ளது.
தீர்க்கப்படாத
இரண்டு வழக்குகள் முடியும் வரை, நீதிபதி வூப்பிஹ்
லி மரணதண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்ததாக சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் நேற்று
பன்னீரின் குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர் என் சுரேந்திரன் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது 37 வயதாகும் பன்னிர், 51.84 கிராம் ஹெராயினை இறக்குமதி செய்யக் கூரியராகச்
செயல்பட்டதற்காக 2017 ஆம் ஆண்டுக் குற்றவாளி என
அறிவிக்கப்பட்டார். கட்டாய மரண தண்டனைக்கு
உட்பட்ட இந்தக் குற்றம் செப்டம்பர் 3, 2014 அன்று உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடந்தது.
இந்நிலையில் பன்னீருக்கு
இன்று துக்குத்தண்டனையை நிறைவேற்றவிருந்த நிலையில், பல அரசு சாரா
நிறுவனங்களும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மரணதண்டனையை நிறுத்த வேண்டும்
என்றும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட
வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஏழு ஐ.நா.
நிபுணர்களும் மரணதண்டனையை நிறுத்துவதற்கான அழைப்பில் இணைந்து, பன்னீரின் வழக்கை ஆதரிக்குமாறு மலேசிய அதிகாரிகளை
வலியுறுத்தினர்.
சர்வதேச
சட்டத்தின் கீழ், வேண்டுமென்றே கொலை
செய்வது உள்ளிட்ட தீவிரமான குற்றங்கள் மட்டுமே மரண தண்டனைக்கான வரம்பை எட்டுகின்றன
என்பதை தாங்கள் மீண்டும் வலியுறுத்துவதாகவும், கட்டாய மரண
தண்டனைகள் இயல்பாகவே மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் தவிர்க்க முடியாமல் மனித
உரிமைகள் சட்டத்தை மீறுகின்றன என்றும் அவர்கள் கூறினர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *