அதிக போதையில் சிம்மைத் திட்டிவிட்டார்; பொருட்படுத்த வேண்டாம்! - அந்தோணி லோக்

- Shan Siva
- 20 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 20: DAP கட்சியின் பினாங்குத் தலைவர் ஸ்டீவன் சிம் மீது
தேசியத் தலைவர் லிம் குவான் எங்கின் உதவியாளர் சமீபத்தில் வசைபாடிய சம்பவத்தைப் பெரிதுபடடுத்த
வேண்டாம் என்று டிஏபி பொதுச்
செயலாளர் அந்தோணி லோக் கேட்டுகொக்ண்டுள்ளார்.
இது ஒரு தனிப்பட்ட
சம்பவம் என்றும், இது டிஏபியில் உறுதியற்ற தன்மையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர்
கூறியுள்ளார்.
டிஏபி ஒற்றுமை
உணர்வை ஆதரிக்கிறது, எனவே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இரவு
விருந்தில் கலந்து கொண்ட அனைவரையும் நீங்கள் பார்க்கும்போது, டிஏபி ஒரு பெரிய குடும்பம் என்பதை நீங்கள் அறிவீர்கள்,” என்று நேற்று இரவு ஒரு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
டான் கோங் சோங் எனும்
சம்பந்தப்பட்ட நபர் கடந்த சனிக்கிழமை பினாங்கில் நடந்த ஒரு
விருந்தில் சிம் மீது மோசமான வார்த்தைகளை வீசியதாகவும், அவரை துரோகி என்றும் அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
சிம் இந்த
சம்பவத்தை "தேநீர் கோப்பையில் ஒரு புயல்" என்று நிராகரித்த அதே வேளையில், கோங் சோங் மன்னிப்பும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *