எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஒழிப்பதே நோக்கம்! - ஸாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

நாடு முழுவதும் அமைதியான சூழல் நிலவிய போதிலும் உலு திராம் காவல் நிலையத்தில் நடந்த அதிகாலைத் தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டது மற்றும் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், தேசிய காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் (NSC) இது போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மிகவும் அமைதியான நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குவதோடு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முன்மாதிரியான நாடு என்று அவர் கூறினார் 

எனவே, பயங்கரவாத பிரச்சினைகளை நம் நாடு எதிர்கொள்ளக் கூடாது என்று அவர் கூறினார்.
 பயங்கரவாதத்திலிருந்து விடுபடுவதை உறுதிசெய்து, பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

எந்தவொரு பயங்கரவாதத்தையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *