துப்பாக்கிச்சூட்டில் பலியான போலீஸ்காரர்களுக்கு பேரரசியார் இறுதி மரியாதை!

top-news
FREE WEBSITE AD

உலு திராம் காவல் நிலையத் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு காவலர்களுக்கான இறுதிச் சடங்கில் மலேசியாவின் பேரரசியார் ராஜா ஸரித் சோபியா கலந்து கொண்டார்.

இங்குள்ள துங்கு லக்சமான அப்துல் ஜலீல் மசூதியில், பகாங் மற்றும் பேராக்கில் இருந்து வந்த, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இன்று சனிக்கிழமை காலை 11.50 மணியளவில் ஜோகூர் காவல்துறை தலைமையகத்தில் உள்ள மசூதியில் இருந்து இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *