கொள்கலன் நிறைய பீர்! - பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

பட்டர்வொர்த், ஜூன் 7:: சீனாவில் இருந்து வந்ததாகக் கருதப்படும் 52,800 பீர் கேன்கள் கொண்ட ஒரு கொள்கலன், போர்ட் கிள்ளானில் உள்ள நார்த் போர்ட் பகுதியில், கைப்பற்றப்பட்டது.

இரண்டு வார கண்காணிப்பைத் தொடர்ந்து, மே 17 அன்று காலை 10.30 மணியளவில் சுங்கத்துறை அமலாக்கக் குழு சரக்குகளை சோதனை செய்தது என்று பினாங்கு சுங்கத்துறை இயக்குனர் ரோசலன் ரம்லி கூறினார்.

மேலும் விசாரணைக்காக அந்த சரக்கு பினாங்குக்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார்.

மொத்தம், 2 லட்சத்து 16 ஆயிரத்து 480 வெள்ளி மதிப்பிலான  26,400 லிட்டர் பீர் வகைகள்  இருந்ததாகவும், அதற்கான செலுத்தப்படாத வரி ரிம7 லட்சத்து 85 ஆயிரத்து 411 என்று ரோஸ்லன் கூறினார்.

இந்த க்கொள்கலன் ஒரு கப்பல் நிறுவனத்தால் கையாளப்பட்டது என்பது ஆரம்பக்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது, இது போர்ட் கிள்ளானில் கிளையைக் கொண்டுள்ளது மற்றும் சிலாங்கூரில் ஒரே உரிமையைக் கொண்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *