நாங்கள் அப்படி இருந்தோம்... அது ஓர் உதராணம்! - படாவி குறித்து மகாதீர்

- Shan Siva
- 15 Apr, 2025
1969 ஆம்
ஆண்டுக்குப் பிறகு 2008 பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (பிஎன்) அதன் மோசமான
தேர்தல் செயல்திறனை வெளிப்படுத்திய பின்னர், 2009 ஆம் ஆண்டு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நஜிப்
ரசாக்கை பிரதமராகப் பொறுப்பேற்க அப்துல்லா அனுமதித்ததாக மகாதிர் கூறினார்.
அவரது வெற்றி
குறைந்து கொண்டிருந்தபோது, அவர் ராஜினாமா
செய்ய வேண்டும் என்று பலர் கோரியபோது, அவர் தயங்கவோ அல்லது பிரச்சனையை ஏற்படுத்தவோ இல்லை. அவர் ராஜினாமா செய்து
நஜிப்பிடம் பதவியை ஒப்படைத்தார்.
நாங்கள் பதவி
விலகியவுடன், பிரச்சினைகள்
இல்லாமல் எளிதாக ஒதுங்கி, நாட்டை வழிநடத்த தகுதியான
அடுத்த தலைவரிடம் விட்டுவிட்டோம்.
இந்த நடைமுறை
தொடர்ந்தால், மலேசியா அமைதியான
நாடாக இருக்கும். அதுதான் அப்துல்லா காட்டிய உதாரணம்,” என்று மகாதிர் இங்குள்ள தேசிய மசூதியில் அப்துல்லாவுக்கு
இறுதி மரியாதை செலுத்திய பிறகு கூறினார்.
இது மலேசியாவின்
வரலாற்றில் மிகச் சிறந்த தேர்தல் முடிவாகும், அனைத்து வாக்குகளிலும் சுமார் 90% அப்துல்லா தலைமையிலான
அரசாங்கத்திற்கு ஆதரவாக பதிவானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அப்துல்லா தனது பதவிக்காலத்தில் பின்னர் "பல பிரச்சினைகளை" எதிர்கொண்டார், இது 2008 பொதுத் தேர்தல் முடிவை மோசமாக்கியது என்று மகாதிர் கூறினார்.
Tun Dr Mahathir memuji Tun Abdullah Ahmad Badawi kerana menyerahkan kuasa secara aman kepada Najib Razak selepas prestasi buruk BN dalam PRU 2008. Beliau juga mengiktiraf kejayaan besar BN di bawah Abdullah pada PRU 2004.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *