நீரில் துர்நாற்றம்; 7 மாவட்டங்களில் நீர்த்தடை!

top-news
FREE WEBSITE AD


ஷ ஆலம், ஜூலை 24:கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஏழு பகுதிகள் நீரின் துர்நாற்றம் மாசுபாடு காரணமாக  தண்ணீர்த் தடை ஏற்பட்டுள்ளதாக ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.

சுங்கை குண்டாங் மற்றும் சுங்கை செம்பாவில் துர்நாற்றம் மாசு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதால், கிள்ளான் பள்ளத்தாக்கின் ஏழு பகுதிகளில் திட்டமிடப்படாத தண்ணீர் தடைகள் ஏற்பட்டுள்ளதாக ஆயர் சிலாங்கூர் அறிவித்தது.  -

ஃபேஸ்புக் பதிவில், ஏர் சிலாங்கூர் தற்காலிக பணிநிறுத்தம் ரந்தாவ் பஞ்சாங், சுங்கை சிலாங்கூர் கட்டம் 1 (SSP1), சுங்கை சிலாங்கூர் 2 ஆம் கட்டம் (SSP2), மற்றும் சுங்கை சிலாங்கூர் கட்டம் 3 (SSP3) WTP களை  பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய ஏழு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திட்டமிடப்படாத நீர் விநியோகம் தடைபடும் இந்த காலகட்டத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆயர் சிலாங்கூர் தண்ணீர் டேங்கர்களை அனுப்பும் என்று தெரிவித்துள்ளது.

இந்த துர்நாற்றம் மாசுபாட்டால் ஏழு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நீர்த் தடை வெள்ளிக்கிழமைக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்று சிலாங்கூர் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழுத் தலைவர் இஷாம் ஹாஷிம்  தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அனைத்து (WTPs) முழு செயல்பாட்டைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நீர் விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மீட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *