10வது மாடியிலிருந்து விழுந்த இளைஞர்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம்!

- Shan Siva
- 28 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 28: கோலாலம்பூர், ஜின்ஜாங்கில் உள்ள ஒரு பொது (PPR) குடியிருப்புப் பகுதியின் 10வது மாடியில் இருந்து விழுந்த 25 வயது இளைஞர் ஒருவர் இன்று அதிர்ஷ்டவ்சமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவம்
குறித்து மதியம் 12.30 மணிக்கு
போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டதாக செந்தூல் காவல்துறைத் தலைவர் அஹ்மத் சுகர்னோ
ஜஹாரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்
PPR ஸ்ரீ அமானின் 10வது மாடியில் இருந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்ததால்
அவர் உயிர் தப்பியதாக சுகர்னோ கூறினார்.
பாதிக்கப்பட்டவர்
இன்னும் சுயநினைவுடன் இருப்பதாகவும், சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பவத்தின் ஏழு வினாடி வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது!
Seorang pemuda berusia 25 tahun terselamat selepas terjatuh dari tingkat 10 PPR Sri Aman, Jinjang, dan mendarat di atas sebuah kereta yang diparkir. Mangsa masih sedar dan dihantar ke Hospital Selayang untuk rawatan. Kejadian itu tular di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *