கடவுளின் விருப்பமா?! ஹாடி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்!

- Shan Siva
- 21 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 21: பிரதமரின் பதவிக்கால வரம்பு தொடர்பான முன்மொழிவை எதிர்த்து பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் வெளியிட்ட பேஸ்புக் பதிவு தொடர்பாக அவர் மீது கெப்போங் டிஏபி இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெபர்சன் சியா போலீஸ் புகார் அளித்துள்ளார்.
இது இன மற்றும்
மத பதற்றங்களைத் தூண்டக்கூடிய ஓர் ஆபத்தான குற்றச்சாட்டு என்று சியா ஓர் அறிக்கையில்
தெரிவித்தார்.
ஹாடியின் இக்கூற்று தொடர்பாக
காவல்துறை நடவடிக்கை
எடுக்கவில்லை என்றால், அது
அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக மிகவும் தீவிரமான, வெறுக்கத்தக்க மற்றும் தேசத்துரோக அறிக்கைகளை
வெளியிட ஊக்குவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஹாடி
நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும், மேலும் அவரது அறிக்கைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஏபியின் தேசிய மாநாட்டில், கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், பிரதமர் பதவிக்கு இரண்டு தவணை மட்டுமே
பதவிக்காலம் என்கிற வரம்பை உள்ளடக்கும் வகையில் கூட்டரசு அரசியலமைப்பை அரசாங்கம்
திருத்த வேண்டும் என்று டிஏபி விரும்புவதாகக் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிமும் இந்த முன்மொழிவுக்கு ஆதரவைத் தெரிவித்தார். ஆனால் அரசியல்
கட்சிகளிடையே ஒருமித்த கருத்து தேவை என்றார்.
இதனை அடுத்து, இந்த முன்மொழிவு கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது என்று கூறி ஹாடி டிஏபியின் அழைப்பை நிராகரித்தார். இஸ்லாமியக் கொள்கைகள் நாட்டின் தலைமையை வழிநடத்த வேண்டும் என்றும், தலைமை என்பது கடவுளிடமிருந்து வந்த புனிதமான நம்பிக்கை என்றும் அவர் கூறினார்!
Ketua Pemuda DAP Kepong, Jefferson Siow, membuat laporan polis terhadap kenyataan Hadi Awang yang menolak cadangan had penggal Perdana Menteri. Hadi mendakwa ia bertentangan dengan Islam, mencetuskan kontroversi. DAP menegaskan keperluan pindaan perlembagaan dengan sokongan Anwar Ibrahim.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *