எதிர்க்கட்சியினருக்கு கற்பிக்கத் தயார்! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

புத்ரா ஜெயா, மே 7:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். பொதுமக்களுக்குத் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க பொருளாதார நிலை குறித்த விரிவுரைகளை ஏற்பாடு செய்ய அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வரவிருக்கும் கோலா குபு பஹாரு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களின் மூலம் அரசாங்க முயற்சிகளை நியாயமற்ற முறையில் விமர்சிப்பதாக நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார்,  குற்றம் சாட்டினார்.
இதில், அரசு ஊழியர்களுக்கு 13%க்கும் அதிகமான ஊதிய உயர்வு அண்மைக்காலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். இவ்விஷயத்தில் எதிர்க் கட்சியினருக்குக் கற்பிக்கத் தயாராக இருப்பதாக அன்வார் கூறினார்.

எதிர்க்கட்சிகள் தவறான விமர்சனங்களால் பொதுமக்களை குழப்புகிறது. அரசாங்கத்தின் முயற்சிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அன்வார் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தினார். செயல்முறை கடினமாக உள்ளது. நான் பல மாதங்களாக அதைப் பற்றி யோசித்து, சம்பள உயர்வு அர்த்தமுள்ளதா என்பதை உறுதிப்படுத்த பல கூட்டங்களில் கலந்துகொண்டேன் என்று அன்வார் கூறினார்.

சம்பள உயர்வை அமல்படுத்துவதற்கான நாட்டின் நிதி திறன் குறித்த கவலைகளுக்கு பதிலளித்த அன்வார், முழுமையான தயாரிப்புக்குப் பின்னரே ஊதிய உயர்வுகள் இறுதி செய்யப்பட்டதாக கூறினார்.
தேவையான அடிப்படை வேலைகளைச் செய்த பின்னரே நாங்கள் அறிவிப்புகளை வெளியிட்டோம். அனைத்து ஆதாரங்கள் மற்றும் வருமானம் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டோம்  என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *