சிலாங்கூரில் 9.4 பில்லியன் கூகுள் முதலீடு! வேலை வாய்ப்புகள் பெருகும் ! - அமிருடின் ஷாரி கருத்து

top-news
FREE WEBSITE AD


ஷா ஆலம், ஜூன் 2: சிலாங்கூரில்  கூகுள் நிறுவனம் 9.4 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்கிறது. இதன் மூலம் பொருளாதார நன்மைகளையும் உள்ளூர் வணிகங்களையும் ஊக்குவிக்கும் என்று சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த முதலீடு மூலம் மொத்தம் 26,500 வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று  அவர் கூறினார்.

எல்மினா பிசினஸ் பார்க், சுங்கை பூலோவில்
“மலேசியாவின் முதல் கூகுள் கிளவுட் டேட்டா சென்டர் மற்றும் பிராந்தியத்திற்கு RM9.4 பில்லியன் முதலீட்டை கூகுள் அறிவித்துள்ளதாகவும், அதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சிலாங்கூரில் உள்ளது  என்றும் அமிருடின் ஷாரி இன்று தமது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

முன்னதாக, முதலீட்டு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஜிஸ், கூகுளின் முதலீடு மலேசியாவில் பல்வேறு துறைகளில் 26,500 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
RM15.04 பில்லியன் (US$3.2 பில்லியன்) மதிப்புள்ள மொத்த பொருளாதார தாக்கத்துடன், சுகாதாரம், கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளில் இது உள்ளடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

மலேசியாவில் RM9.4 பில்லியன் முதலீடு புதிய தொழில்துறை மாஸ்டர் பிளான் 2030 (NIMP 2030) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள டிஜிட்டல் லட்சியங்களை கணிசமாக முன்னேற்றும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கூகுளின் தலைமை நிதி அதிகாரியான ரூத் போரட் அல்பபெட் இன்க் (ஆல்பபெட்) இன் தலைவர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ஆகியோருக்கு இடையே நடந்த விவாதங்களை தொடர்ந்து இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டது.

14 நவம்பர் 2023 அன்று மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் (MIDA) கூகுளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *