2027 சீ விளையாட்டுப் போட்டியில் ஜொகூரும் இணைகிறது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, டிச 7: கோலாலம்பூர், சரவாக் மற்றும் பினாங்கில் நடைபெறும்  2027 சீ விளையாட்டுப் போட்டியை ஜொகூர் இணைந்து நடத்தும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோஹ் தெரிவித்துள்ளார். முன்னதாக ஒப்புக்கொண்டபடி, ஜொகூர் கால்பந்து நிகழ்வை மட்டுமே நடத்தும் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

இஸ்கண்டார் புத்ரியில் உள்ள சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியம் போன்ற சிறந்த கால்பந்து உள்கட்டமைப்பு மற்றும் ஆடுகளங்கள் ஜோகூரில் உள்ளது. அங்கு M-லீக் சாம்பியன்களான JDT தங்கள் சொந்த போட்டிகளில் விளையாடுகிறது.

“கால்பந்திற்கான 2027 SEA கேம்ஸின் இணை நடத்துநராக ஜொகூர் இருக்கும் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *